இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயாணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் இந்த திட்டத்தில் 213 தகுதியான பட்டியலின சமூகத்தை சேர்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், எந்த ஆதரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, இந்த திட்டத்தால் உண்மையாக பட்டியலின மற்றும் பழங்குடியினர் பயனடைய வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் இந்த திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள 213 தூய்மை பணியாயாளர்களையும் பங்குதாரர்களாக சேர்க்கப்படுவார்கள் என ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் அமைப்பு தெரிவித்ததையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
The post தூய்மைப்பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் திட்டத்துக்கு எதிராக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.