திருமலை: திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 66 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 66,616 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,837 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.2.95 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 26 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 66 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.