தொடர்ந்து தீபாராதனை காட்டிய சூடம் பட்டாடையில் கொண்டு வரப்பட்டு வேதபாராயண முறையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி திடலில் அக்னி வளர்க்கப்பட்டது. மாலையில் விரதம் இருந்து காப்பு கட்டிய 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக சென்று பின்னர் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கினர். முன்னதாக 2 பசுக்கள் பூக்குழி இறங்கின. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சாலை லட்சுமி, சேதுராமன், தாசில்தார் (பொ) மைதீன் பாட்டணி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில், ஏடிஎஸ்பிகள் ராஜ், ஜூலியஸ் கேசர், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவகிரி பாலமுருகன், வாசுதேவநல்லூர் கண்மணி, கடையநல்லூர் ஆடிவேல் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கருப்பையா, மாடசாமி ராஜா ஆகியோர் தலைமையில் தீயணைப்புத்துறையினர் பூக்குழி திடலை சுற்றிலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். 30ம்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
The post வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயிலில் 25 ஆண்டுகளுக்குப்பின் பூக்குழி திருவிழா: திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.