சென்னை: தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு நிலவரம், கொலை, கொள்ளை சம்பவங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
The post தலைமை செயலாளர் முருகானந்தம் காவல்துறையுடன் ஆலோசனை appeared first on Dinakaran.