அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து எடப்பாடி பழனிசாமி வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.இதில் வெறும் புரளி என தெரியவந்தது. போலீசார் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 25ம் தேதி இதே பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 4 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
The post எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு 2வது முறை வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.