வதந்தி
ரூ.445 கோடி கோயில் உண்டியல் பணத்தை சர்ச், மசூதி கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு செலவழித்துள்ளதாக நாளிதழ் ஒன்றின் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் பொய்யான தகவல். பதிவிட்டவர் பகிர்ந்த நாளிதழின் புகைப்படத்தில் இடம்பெற்ற செய்திக்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கர்நாடகாவில் உள்ள கோயில்களின் உண்டியலில் வசூலான நிதி தொடர்பாகவே அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு என்று திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கோயில்களுக்கும், இந்து சமயம் சார்ந்த விவகாரங்களுக்காக மட்டுமே அரசு செலவு செய்கிறது.
The post தமிழ்நாட்டில் ரூ.445 கோடி கோயில் நிதியில் மசூதி, தேவாலயம் கட்டப்படுவதாக வதந்தி : அரசின் உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.