சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு ஜாபர் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட வழக்கில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன்க் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில், ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மணிஷ் சிஷோடியா தீர்ப்பை முன் உதராணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

The post சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு ஜாபர் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: