மதுரை மழலையர் பள்ளி நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்ததை அடுத்து பள்ளியின் உரிமம் ரத்து

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளியில் நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்ததை அடுத்து பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மழலையர் பள்ளி தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி குடிநீர் தொட்டியில் 4 வயது சிறுமி விழுந்து உயிரிழந்ததை அடுத்து திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி நேற்று கைது செய்யப்பட்டனர்.

The post மதுரை மழலையர் பள்ளி நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்ததை அடுத்து பள்ளியின் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: