கலவரம் பாதித்த முர்ஷிதாபாத்துக்கு சென்று பார்வையிட உள்ளதாக மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்திருந்தார். ஆனால் கலவரம் நடந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என ஆளுநருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில்,ஆளுநர் ஆனந்த போஸ் மால்டாவுக்கு நேற்று சுற்றுபயணம் மேற்கொண்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் முன் கூறுகையில்,‘‘ நான் சம்பவ பகுதிகளை பார்வையிட செல்கிறேன்’’ என்றார். இதற்கிடையே, மால்டாவில் தஞ்சமடைந்துள்ளவர்களை தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் நேற்று சந்தித்தனர்.
The post முதல்வர் மம்தா விடுத்த வேண்டுகோளை ஏற்காமல் வன்முறை பாதித்த பகுதிக்கு மேற்கு வங்க ஆளுநர் பயணம் appeared first on Dinakaran.