பாக். வான்வெளி தடையால் விமான நிறுவனங்களுக்கு வாரம் ரூ.77 கோடி செலவு

மும்பை: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமகா இந்தியா விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவற்கு வியாழன் முதல் அந்நாடு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் வான்வெளி தடை காரணமாக விமான நிறுவனங்களுக்கு வாரத்துக்கு ரூ.77 கோடி கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று இந்த துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பயண நேரம் அதிகரிப்பு, தோராயமான செலவுகளின் அடிப்படையில் கூடுதல் மாதாந்திர செயல்பாட்டு செலவுகள் ரூ.306 கோடிக்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மாற்று விமான பாதை காரணமாக டெல்லி மற்றும் வட இந்திய நகரங்களில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு பயண நேரம் 1.5 மணி நேரம் கூடுதலாகும். இதனால் விமான நிலையத்தில் தொழில்நுட்ப நிறுத்தம் காரணமாக தரையிறக்கம் மற்றும் பார்க்கிங் கட்டணம் உட்பட சுமார் ரூ.29 லட்சம் செலவை எதிர்கொள்ள நேரிடும்.

The post பாக். வான்வெளி தடையால் விமான நிறுவனங்களுக்கு வாரம் ரூ.77 கோடி செலவு appeared first on Dinakaran.

Related Stories: