குட்கா விற்ற முதியவர் கைது: 15 கிலோ பறிமுதல்

பூந்தமல்லி: வானகரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் வானகரம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வானகரம், சிவ பூதமேடு, மணவாள பெருமாள் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சந்தேகப்படும்படி வந்த நபரை மடக்கி விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். போலீசார் அந்த நபரை சோதனை செய்தபோது அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரித்த போது, மதுரவாயலைச் சேர்ந்த அம்பல ஆதித்தன் (63) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் வெளி மாநிலங்களில் இருந்து குட்காவை வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே இரண்டு குட்கா வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post குட்கா விற்ற முதியவர் கைது: 15 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: