சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை: ரயில்வே பாலம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் தொடங்கியது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

“சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது. பாமக எம்.எல்.ஏ. அருள் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

தேனி – மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. விரைவு படுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் அமைக்கப்படுமா என அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். “இந்த ஆண்டே இது தொடர்பாக ஆய்வு நடத்தி, புதிய கோட்டம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

The post சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.

Related Stories: