1.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு

சென்னை: மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.மக்காச்சோளத்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் படி, மாணாவாரியில் அதிக மகசூல் தந்து உழவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கச் செய்வதில் மக்காச்சோள பயிர் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் மக்காச்சோளம் 10.13 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோளம் சாகுபடி மூலம், உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க செய்யும் வகையில், மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம் மூலம்1.87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் விவசாயிகள் பயன் அடையும் வகையில் இத்திட்டம் ரூ.40.27 கோடியில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

 

The post 1.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: