மாடு முட்டி தாய், குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்

 

கோவை, மார்ச் 15: கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவரது மனைவி ஜீனத் நிஷா. இவர்களது 5 மாத குழந்தை ஷாஜில்யான். நேற்றிரவு ஜீனத் நிஷா, தனது 5 மாத குழந்தையுடன் தொழுகைக்கு சென்று விட்டு, மாமா சாஹிப்-வுடன் உக்கடம் புல்லுக்காடு வழியாக வீடு திரும்பினர். அப்போது, அப்பகுதியில் இரண்டு மாடுகள் சண்டையிட்டு இருந்ததாக தெரிகிறது.
மாடு வேகமாக ஓடி வந்து ஜீனத் நிஷாவை முட்டி தள்ளியது. இதில், ஜீனத் மற்றும் அவரது 5 மாத குழந்தை படுகாயமடைந்தது.

மேலும், மாடு சாஹிப்-யையும் தாக்கியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூன்று பேரையும் மீட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு முட்டி குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் உக்கடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாடு முட்டி தாய், குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: