பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய குட்கா பறிமுதல்: உரிமையாளருக்கு வலை

கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மோனாதபுரம் பகுதியில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரில் சோதனை செய்த போது, 51 ஆயிரத்து 920 மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவை பெங்களூருவில் வாங்கி சேலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, குட்கா மற்றும் ₹2 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரின் உரிமையாளர் மற்றும் குட்கா கடத்தி வந்த நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய குட்கா பறிமுதல்: உரிமையாளருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: