தஞ்சை பெரியகோயில் தொடர்பான வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை பெரியகோயில் தொடர்பான வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த சக்திபாபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில்; தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த கோயிலாகும். கருவறையில் மூலவர் கலசம் இடையே தொடர்பை துண்டிக்கும் வகையில் சிமென்டால் ஆன மேற்கூரை சமீபத்தில் அமைக்கபப்ட்டுள்ளது.

கலசத்திற்கும் மூலவர் சிவலிங்கத்துக்கும் இடையே தொடர்பு உள்ளது; இதை துண்டிக்கக் கூடாது. தஞ்சை பெரிய கோயில் மூலவர் சிலை – கோபுர கலசம் நடுவே உள்ள மேற்கூரையை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; அறநிலையத்துறை ஆணையர், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய துணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post தஞ்சை பெரியகோயில் தொடர்பான வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: