மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை நவ.6-க்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம். சிபிஐ தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை நவ.6-க்கு ஒத்திவைத்தது மதுரை நீதிமன்றம். சிபிஐ அதிகாரி விஜயகுமார் சுக்லாவிடம் குறுக்கு விசாரணை நடத்த
வேண்டும் என ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.