×
Saravana Stores

சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

கோவை: பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை பேருந்து நிலையம் மார்க்கமாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது.

காலை 8 மணியளவில் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பேருந்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து சட்டென சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், பேருந்தை சாலையோரமாக நிறுத்தி உடனடியான பயணிகளை கிழே இறக்கிவிடப்பட்டனர். பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பாதுகாப்பாக இறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீ பரவி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பேருந்து மளமளவென எரிந்தது. பேருந்தில் இருந்து உடனடியாக இறக்கி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக, அதில் பயணித்த மக்கள் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pollachi ,Othakkal Mandapam ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற...