×
Saravana Stores

மெரினாவில் ரகளை செய்த பெண்: ஜாமின் கோரி மனு

சென்னை: சென்னை மெரினாவில் போதையில் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். மெரினாவில் போதையில் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடி காவலர்களை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில், தான் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவள்; தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளேன் என தனலட்சுமி ஜாமின் மனு தாக்கல் செய்தார். தனலட்சுமி ஜாமின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post மெரினாவில் ரகளை செய்த பெண்: ஜாமின் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : jamín cori ,Chennai ,Jamin Kori ,Chennai Marina ,Chandramohan ,Dhanalakshmi ,Jamin Gori Manu ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி