ராமேஸ்வரம் மீனவர் 16 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 399 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. பகலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கடற்பரப்பில் வழக்கத்துக்கு அதிகமான இலங்கை கடற்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை திடீரென சுற்றிவளைத்து சிறை பிடித்தது.

இரண்டு படகை பறிமுதல் செய்து, அதிலிருந்து 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கை, ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் இந்தாண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர். 61 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ராமேஸ்வரம் மீனவர் 16 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: