மேற்கூறியவாறு, பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள், தங்களின் வளாகங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை தங்களின் வளாகத்திற்குள்ளாகவே பதப்படுத்தி செயல்முறைப்படுத்தவும், அவ்வாறு இயலாத பட்சத்தில் கழிவுகளை அகற்ற மாநகராட்சியால் அங்கீகாரம் பெற்ற குப்பை சேகரிப்பாளர்களிடம் அல்லது மறுசுழற்சி செய்பவர்களிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் வீட்டுக் கழிவுகளை சேகரிப்பதற்காக தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாமல் விதிமீறல்களில் ஈடுபடும் பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post திடக்கழிவுகள் அகற்றுவதில் விதிமீறினால் ரூ.5,000 அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.