சென்னையில் பிஎஸ்கே குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

 

சென்னை: சென்னையில் பிஎஸ்கே குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். பட்டினப்பாக்கம், லூப் சாலை, டூமிங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு அரசு தொடர்பான கட்டுமானங்களை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பிஎஸ்கே பெரியசாமி. சேலம் இளங்கோவன் தொடர்பான இடங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது பிஎஸ்கே குழுமத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு பிஎஸ்கே குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. 2019ல் நடந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.112 கோடி மதிப்பிலான சொத்து விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. 2019ல் நடந்த சோதனையின்போது சுமார் ரூ.14 கோடி ரொக்கமும் -பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் பிஎஸ்கே குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: