ஆந்திராவில் சாலையில் சுற்றித்திரிந்த புலியால் பரபரப்பு: வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ பதிவு

திருமலை: ஸ்ரீசைலம் வனப்பகுதியில் இருந்து சாலையில் புலி சுற்றிதிரிந்தது. இதனை வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ பதிவு செய்து வைரலாகினர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் நல்லமல்லா வனப்பகுதியில் இருந்து நேற்று சாலையில் திடீரென ஒரு புலி வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை வேகமாகவும், வந்த வழியாக திருப்பியும் ஓட்டிச்சென்றனர். அவ்வழியாக காரில் சென்றவர்கள் சிலர் புலி நடமாட்டத்தை வீடியோ எடுத்தனர். இதில் புலி சாலையில் சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. காரில் இருந்தவர்கள் புலியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

சைலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆத்மகுரு மற்றும் மார்க்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலிகளைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கேமராவில் அவ்வப்போது விலங்குகள் நடமாட்டம் பதிவாகியுள்ளன. இந்நிலையில் சாலையில் புலியின் நடமாட்டம் வீடியோவை பார்த்த அப்பகுதி மக்களும், பக்தர்களும் பீதியடைந்துள்ளனர். புலி நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர், பக்தர்களுடன் சேர்ந்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீசைலம் மலைப்பாதை சாலையில் செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

The post ஆந்திராவில் சாலையில் சுற்றித்திரிந்த புலியால் பரபரப்பு: வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ பதிவு appeared first on Dinakaran.

Related Stories: