5 நக்சலைட் சுட்டுக்கொலை

கட்சிரோலி: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிரோலி மாவட்டத்தில் சட்டீஸ்கர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக நக்சலைட் அமைப்புகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமாண்டோ படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும் நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். வனப்பகுதியில் தொடர் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

The post 5 நக்சலைட் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: