×
Saravana Stores

“தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பேர் வர வாய்ப்பு” : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் புதிய வெள்ளி திருத்தேர் திருப்பணிகள் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் குடமுழுக்கிற்கான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கு மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கிரிவலப் பாதை, குடிநீர் வழங்கும் நிலையம், சுகாதார நிலையம் ஆகியவை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும். எவ்வித அசம்பாவிதமும் இல்லாத வகையில் இந்தாண்டு தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post “தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பேர் வர வாய்ப்பு” : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Deepat festival ,Minister ,Sekharbhabu ,Chennai ,New Silver Thiruther ,Kaligambala Temple ,Barimuna ,Kudaruk ,Gangadishwarar Temple ,Purasaiwakak ,Tiruvannamalai Karthigai Deepat Festival ,
× RELATED மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை...