×
Saravana Stores

திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள் ஆய்வு

கலவை: திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். கலவை அடுத்த திமிரி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாபுரம் ஊராட்சி உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று திடீரென மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரேமலதா ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவிகளின் ஆங்கில வாசிப்பு திறன் குறித்து கேட்டு அறிந்தார். அதேபோல், திமிரி அடுத்த புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குப்பம், காவனூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளி கல்வி அலுவலர் பிரேமலதா, ஆய்வு நடத்தினார்.

அப்போது பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர் வருகை பதிவேடுகளை சரிபார்த்தார். தொடர்ந்து, சத்துணவு கூடத்திற்கு சென்று உணவு பொருட்களின் இருப்புகளை பார்வையிட்டார். ஆய்வின்போது வட்டாரக் கல்வி அலுவலர் முருகன், வெங்கடாபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் ரகு, குப்பம் பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி, மேல் நாயக்கன் பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் திருப்பாவை உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

The post திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Timiri Union ,Union Secondary School ,Venkadapuram Oratchi ,Dinakaran ,
× RELATED பள்ளியில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை: மாணவர் படுகாயம்