மாணவர்களுக்கு ஓவிய போட்டி

சிங்கம்புணரி, செப். 19: சிங்கம்புணரி எஸ்.எஸ் மெட்ரிக் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. அரிமா சங்கம் சார்பில், `எல்லையற்ற அமைதி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பலவித ஓவியங்களை வரைந்தனர். பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கௌரி சாலமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், மண்டல தலைவர் அண்ணாதுரை செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு ஓவிய போட்டி appeared first on Dinakaran.

Related Stories: