புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி

 

முத்துப்பேட்டை, அக். 19: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் இடும்பாவனம் ஆகிய பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜா உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மற்றும் இடும்பாவனம் பகுதியில் உணவு பாதுக்காப்பு அலுவலர் அழகுவேல், அலுவலர் ராகுல் மற்றும் போலீசார், சுகாதாரத்துறையினர் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலைப் பொருட்கள் விற்றதாக 4 கடைகளுக்கு பூட்டி சீல்வைக்கப்பட்டது.

The post புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: