வேலூரில் மாநில அளவிலான போட்டி குமரி மாவட்ட கைப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு

நாகர்கோவில், அக். 19: வேலூரில் வருகிற 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாநில அளவிலான இளையோர் கைப்பந்து போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் குமரி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வீரர் வீராங்கனைகள் தேர்வு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்தத் தேர்வில் 1.1.2002க்கு பிறகு பிறந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் தரப்பில் 100 வீரர்களும் பெண்கள் தரப்பில் 50 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். வீரர் வீராங்கனைகளை குமரி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் சுரேந்திர குமார், அவைத் தலைவர் டென்னிஸ், செயலாளர் ரெத்தினபாண்டியன், துணைத் தலைவர் செல்ல சிவலிங்கம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இதில் ஆண்கள் தரப்பில் 20 வீரர்களும் பெண்கள் தரப்பில் 17 வீரங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பின்பு ஆண்கள் தரப்பில் 12 பேரும் பெண்கள் தரப்பில் 12 பேரும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். வீரர், வீராங்கனைகள் தேர்வில் குமரி மாவட்ட கைப்பந்து கழக நிர்வாகிகள் ரகுநாத், அமர்நாத், சுனேஷ், ரஞ்சித், சதீஷ்குமார், ஆல்சன், அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வேலூரில் மாநில அளவிலான போட்டி குமரி மாவட்ட கைப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: