கல்லூரிகளுக்கு இடையே வாலிபால் போட்டி

 

திருச்சி, அக்.18: கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான வாலிபால் போட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி-திருச்சி வளாகத்தில் நடைபெற்றது. 11 அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டியின் இறுதி போட்டியில் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி-திருச்சி வளாகம், 25-5, 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து சென்னை, அண்ணா பல்கலைக்கழக 13வது மண்டல மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்து மண்டலங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, எம்ஐஇடி., பொறியியல் கல்லூரியை 28-30, 25-22, 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

The post கல்லூரிகளுக்கு இடையே வாலிபால் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: