துறையூர் ஒன்றிய குழு சாதாரண கூட்டம்

 

துறையூர், அக்.17: துறையூர் ஒன்றியக் கவுன்சில் குழுவின் சாதாரணக் கூட்டம் நேற்று தலைவர் சரண்யா மோகன்தாஸ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜஸ்டன் ஜோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ரூபிணி, புனிதா, லலிதா, அசோகன், சின்னம்மாள், சதீஷ்குமார், சரசு, சரண்யா, தங்கராஜ், சிவகுமார், இந்துமதி, ரெங்கசாமி, சுபாஷ், பேபி, சுப்பிரமணியன், மகேஸ்வரி,முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் துறையூர் ஊராட்சி ஒன்றிய புதிய கட்டிடத்திற்கு ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர், துணை முதல்வர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு கூட்ட மன்றத்தில் நன்றி தெரிவித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சில் குழு ஒப்புதலுக்காக வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post துறையூர் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: