துறையூர் அருகே சித்திரப்பட்டியில் புதிய ரேஷன் கடை

 

துறையூர், அக்.17: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சித்திரப்பட்டியில் புதிய ரேஷன் கடையை ஸ்டாலின் குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த சித்திரப்பட்டி கிராம பொதுமக்கள் புதிதாக ரேஷன் கடை கட்டித்தர கோரிக்கை வைத்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்கப்பட்டு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவில் துறையூர் எம் எல் ஏ ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ரேசன் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மதுராபுரி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராமராஜ், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் வினோத்குமார், துறையூர் வட்ட வழங்கல் அலுவலர் குணசுந்தரி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

The post துறையூர் அருகே சித்திரப்பட்டியில் புதிய ரேஷன் கடை appeared first on Dinakaran.

Related Stories: