சென்னை: யானைக்கவுனி, பேசின் பாலத்தைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். மழை நீர் அகற்றும் பணியை ஆய்வுசெய்த முதலமைச்சர், சாலையோர தேநீர் கடையில் தேநீர் அருந்தினார். மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் விரைவாக அதனை அகற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.