குண்டர் தடுப்புச் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

ராமநாதபுரம், அக்.15: கமுதி அருகே உடையார்கூட்டம் கிராமத்தை சேர்ந்த திருப்பதி மகன் முகேஷ் கண்ணன்(21). இவர் மீது திருச்சுழி, மண்டலமாணிக்கம், கமுதி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது.இதற்கிடையில் கடந்த செப்டம்பர் மாதம் பாலசுப்பிரமணியபுரம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதனையடுத்து தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த முகேஷ்கண்ணன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி.சந்தீஷ் பரிந்துரை செய்தார்.இதனைத் தொடர்ந்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில், முகேஷ் கண்ணன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கமுதி இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், எஸ்.ஐ நாகநாதன் தலைமையிலான கமுதி போலீசார் ராமநாதபுரம் சிறையில் இருந்த முகேஷ் கண்ணனை மதுரை மத்திய சிறைக்கு கொண்டுச் சென்று அடைத்தனர்.

The post குண்டர் தடுப்புச் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: