தஞ்சாவூர் திருவையாறில் ரத்ததான முகாம்

 

திருவையாறு, அக். 15: திருவையாறு ஏபிஜே அப்துல் கலாம் நற்பணி மன்றம், நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரண்டாம் ஆண்டு ரத்ததான முகாம் அரசு உதவி பெறும் சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமை வகித்தார், டாக்டர் சுவேதா குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி டாக்டர் கிஷோர்குமார் மற்றும் குழுவினர் 35 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு 35 யூனிட் ரத்தம் தானமாக பெற்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுகாதார மேற்பார்வையாளர் தாசன், சுகாதார ஆய்வாளர்கள் அண்ணாமலை, கார்த்திகேயன், வாசுவேதவன் மற்றும் செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அப்துல்கலாம் நற்பணி மன்ற நிறுவன தலைவர் சசிகுமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ராஜராஜன் மற்றும் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post தஞ்சாவூர் திருவையாறில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: