மளிகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. காய்கறிக் கடைகளிலும் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. தாமதமாக கடைகளுக்கு சென்ற சிலர், எந்தப் பொருளும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். தொடர் மழையால் மின்சாரம் தடை படலாம் எனக் கருதி, ஏராளமானோர் மெழுகுவர்த்திகளை வாங்கி பைகளில் அடுக்கிக் கொண்டனர். பால் பாக்கெட்களும் கிடைக்கவில்லை. பவுடர் பால் கூட விற்றுத் தீர்ந்து விட்டது. சென்னையில் பெரும்பாலான மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஈர மாவு பாக்கெட்கள், கோதுமை மாவு, ரெடிமேட் உணவு பாக்கெட்கள் அதிகமாக விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post கடைகளில் அலைமோதிய கூட்டம் காய்கறி, மளிகை பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன appeared first on Dinakaran.