கலைஞர் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது வழக்கு பதிய கரூர் நீதிமன்றம் உத்தரவு


கரூர்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பேசினார். இதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் பேசினார். இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. பல்வேறு மாவட்டங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு ெசய்யப்பட்டது.

இந்நிலையில் கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன், கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் கடந்த 7ம் தேதி தாக்கல் செய்த மனுவில், கலைஞர் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பரத்குமார், இது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யலாம் என தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post கலைஞர் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது வழக்கு பதிய கரூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: