ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: எல்.முருகன் வாழ்த்து

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஒரு அரசியல் கோட்பாடு 100 ஆண்டுகளாக மனித குலத்தை செம்மையாக வழிநடத்துவது உலகில் வேறு எங்கும் காண முடியாத ஒன்று. ஒவ்வொரு ஸ்வயம் சேவகர்களுக்கும் மனமார்ந்த வணக்கங்கள். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆழமாக வேர் பதித்து சங்கம் செய்து வரும் பணிகள் அளப்பரியது. பேரிடர் காலங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆற்றி வரும் அரும் பணிகள் ஏராளம். சமுகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து ஆர்.எஸ்.எஸ் அரும்பணியாற்றி வருகிறது. பாரத தேசத்தின் பாரம்பரிய பெருமையை மீட்டெடுக்கவும், துண்டாடப்பட்ட தேசத்தை மீண்டும் இணைத்து பாரதத்தை பெரும் தேசமாக்குவதற்கு உறுதி ஏற்போம். உலகின் குருவாய் பாரதமாகிட உன்னத சக்தி வளர்ப்போம்.

The post ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: எல்.முருகன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: