மீட்புப்பணிகளை துரிதப்படுத்திய முதல்வர்: எக்ஸ் தளத்தில் கனிமொழி பதிவு

சென்னை: பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நிகழ்ந்த மைசூர்-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். விபத்து நிகழ்ந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மீட்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், துயர் சூழ்ந்த இந்த வேளையில், அவர்களின் குடும்பத்தினர் உறுதியுடன் இருக்கவும் விழைகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

The post மீட்புப்பணிகளை துரிதப்படுத்திய முதல்வர்: எக்ஸ் தளத்தில் கனிமொழி பதிவு appeared first on Dinakaran.

Related Stories: