‘எதுவும், எப்படியும், எங்கும் நடக்கலாம்’ அதிமுகவுடன் பாஜ மீண்டும் கூட்டணியா?.. தமிழிசை மழுப்பல் பதில்

அவனியாபுரம்: அதிமுகவுடன் பாஜ தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழிசை சவுந்தர்ராஜன் மழுப்பலமாக பதிலளித்தார். புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுக – பாஜ கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது குறித்து கேட்டதற்கு, ‘‘தேர்தல் வரும்போது எதுவும், எப்படியும், எங்கும் நடக்கலாம்.

இப்போதைக்கு எங்கள் வேலை கட்சியை பலப்படுத்த உறுப்பினர் சேர்க்கை பணிகள் மட்டுமே. கூட்டணி குறித்து எங்கள் தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள். ஒன்றிய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளன. அவற்றை தமிழ்படுத்தினால் மட்டுமே மக்களுக்கு புரியும். இந்த பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.

The post ‘எதுவும், எப்படியும், எங்கும் நடக்கலாம்’ அதிமுகவுடன் பாஜ மீண்டும் கூட்டணியா?.. தமிழிசை மழுப்பல் பதில் appeared first on Dinakaran.

Related Stories: