விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம்: 27ம் தேதி நடக்கிறது

 

கரூர், செப். 25: மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாமல் கலந்து கொண்டு, குறைகளை தெரிவித்து, பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிது. இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம்: 27ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: