மிலாடி நபி டாஸ்மாக் கடை மூடல்

 

கரூர், செப். 17: மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மிலாடி நபியை முன்னிட்டு இன்று கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் எப்எல்2 மற்றும் எப்எல்3 உரிமம் பெற்ற ஓட்டல்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் (டாஸ்மாக் கடைகள்) எப்எல்2, எப்எல்3 உரிமம் பெற்ற கூடங்கள் மூடப்படவேண்டும். அன்றைய தினம் விற்பனை ஏதும் செய்யக்கூடாது. அரசின் அறிவிப்பை மீறி கள்ள மார்க்கெட்டில் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மிலாடி நபி டாஸ்மாக் கடை மூடல் appeared first on Dinakaran.

Related Stories: