10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தை, மகன் கைது

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது புகாரை தெரிவிக்க வசதியாக பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் போடும் மனுக்களை பள்ளி தலைமையாசிரியை வாரந்தோறும் எடுத்து ஆய்வு செய்வார். இதன்படி கடந்த 16ம் தேதி தலைமையாசிரியை மனுக்களை படித்து பார்த்தபோது, அதில், ஒரு மனுவில் 10 வயது மாணவி தனக்கு இருவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமையாசிரியை புகார் செய்தார். போலீசார் விசாரணையில், மாணவி வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றும் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த ராசு (65), அவரது மகன் கொத்தனார் முருகேசன் (38) ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

The post 10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தை, மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: