விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: செப்.6ம் தேதி (வெள்ளிக்கிழமை, முகூர்த்த நாள்) 7ம் தேதி (சனிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி), 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்.5,6,7 ஆகிய நாட்களில் 1,030 பேருந்துகளும், செப்.8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: