மேட்டூர் அணை 16 கண் மதகுகள் மூடப்பட்டன

சேலம்: மேட்டூர் அணை 16 கண் மதகுகள், உபரி நீர் போக்கி 8 நாளுக்கு பிறகு இன்று காலை 5 மணிக்கு மூடப்பட்டன. மேட்டூர் அணை கடந்த 30-ம் தேதி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீரை வெளியேற்ற 16 கண் மதகு திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி 16 கண் பாலம் இன்று காலை மூடப்பட்டது. மேட்டூர் அணையில் பாசனத்துக்காக நீர்திறக்கப்படும் நீரின் அளவு 21500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் பாசனத்துக்காக அணை மின் நிலையம், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 21500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணை 16 கண் மதகுகள் மூடப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: