புதிய பாட்டிலில் பழைய மது என்றும் பெயரளவில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுவிட்டு அடிப்படை சாரத்தில் மாற்றம் எதுவுமில்லை என்றும் அவர் சாடி உள்ளார். மேலும் பேசிய அவர், ” அமலுக்கு வந்துள்ள பிஎஸ்ஏ என அழைக்கப்படும் இந்திய சாட்சியச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களின் கீழ், வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க நீதிமன்றங்கள் அதிகபட்சம் இரண்டு ஒத்திவைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். குற்றவியல் வழக்குகளில் விசாரணை முடிந்து 45 நாட்களுக்குள் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.விசாரணையின் முதல் 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் கட்டமைக்கப்பட வேண்டும். இத்தகைய கடுமையான காலக்கெடுவை நீதிமன்றங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்ற கேள்வி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.”
The post புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.