அந்த மாணவரை 300 முறைக்கு மேல் தோப்புக்கரணம் போட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாணவரின் சிறுநீரகத்தில் அதிகளவிலான அழுத்தம் ஏற்பட்டதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 4 முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட கல்லூரின் முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 7 மாணவர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், 2ம் ஆண்டு படித்து வரும் 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!! appeared first on Dinakaran.