மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாடு முழுவதும் கண்டனம் வலுத்ததை அடுத்து போலீசார் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கூடுதல் விசாரணை மேற்கொள்ள கோரி பிரிஜ் பூஷண் கோரிக்கையை டெல்லி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது விட்டது. மேலும், பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!! appeared first on Dinakaran.