தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 19-ம் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நேற்றைய வெப்ப நிலை அடிப்படையில் இந்தியாவில் ஆந்திராவின் அனந்தப்பூர் (111°F) முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு (108°F) 8-ம் இடம்பிடித்துள்ளது.
The post இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் ஈரோடு 8-ம் இடம்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.