இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் ஈரோடு 8-ம் இடம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் தமிழகத்தில் ஈரோடு 8-ம் இடம் (108) பிடித்துள்ளது. ஆந்திராவின் அனந்தப்பூர் (111°F) முதலிடத்திலும் ஒடிசாவின் புவனேஸ்வரில் (110°F) 2ம் இடத்திலும் உள்ளன. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 19-ம் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நேற்றைய வெப்ப நிலை அடிப்படையில் இந்தியாவில் ஆந்திராவின் அனந்தப்பூர் (111°F) முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு (108°F) 8-ம் இடம்பிடித்துள்ளது.

The post இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் ஈரோடு 8-ம் இடம்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: