நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!

சென்னை: அட்சய திரிதியை நெருங்கி வரும் நேரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. இப்படியே உயர்ந்து மார்ச் 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6600க்கும் சவரன் ரூ.52,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு வரும் 10ம் தேதி அட்சயதிரிதியைக்கு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!! appeared first on Dinakaran.

Related Stories: